Sunday, November 16, 2008

இறையருள் துணையே!

வாழ்வில் எதுவும் வசப்படக் கூடும்
..வழியை வகுத்திடு மனமே!
தாழ்வும் உயர்வும் சமமென ஏற்கும்
..தகவை உணர்ந்திடு உளமே!
காழ்ப்பை விடுத்துக் கருணையில் ஆழ்ந்து
..கருத்தில் பக்குவ நிலைகொள்!
சூழும் வினையாம் சுழல்தனை நீக்கும்
..சுகமாம் இறையருள் துணையே!

1 comment:

Akila said...

அம்மா..
இறையருள் இல்லையேல்..
இல்லறம் ஏதென்று..
இயல்பாய் சொன்ன கவி அருமை
அன்புடன்
அகிலா