Monday, November 3, 2008

சொல்லால் அழியும் துயர்!

சொல்லால் அழியும் துயர்!

வெல்வேல் முருகன் தாள் வேண்டித் துதித்திட்டால்
வல்வினையும் தீர்ந்துவிடும் வாழ்வுயரும் -- பல்விதமாய்
நல்மனதால் நாடிடவே ஞானவடி வேலனெனும்
சொல்லால் அழியும் துயர்.

No comments: