Friday, November 7, 2008

சிவன் துதி.


மஞ்சுதவழ் வளரிமய மலைமகளுன் இடமாக,
...மதிநதியும் விரிசடையும் இலங்கிடவும்,
நெஞ்சுநெகிழ் பக்தியுடன் நீலகண்ட! உன்கோலம்
...நினைந்தென்றன் வினைதீர்க்க வேண்டிடுவேன்!
தஞ்சமெனில் அபயமெனும் சர்வேச!உன்கரமே!
...தாண்டவத்தில் மோனதவ முகமொளிரும்!
செஞ்சிலம்பு மலரணிதாள் சீர்த்தியினில் மனமுருகச்
...செய்திடுமுன் அருள்திறத்தை என்னசொல்வேன்!

No comments: