Saturday, November 15, 2008

நாண்மலர் தூவுவோம்!

ஏடு தந்தவன் ஏறு கொண்டவன்
...ஏற்றம் சொல்லிடக் கூடுமோ?
பாடு கின்றவர் பாட்டை தீர்ப்பவன்
...பக்தி கொண்டவர்ப் பாங்குளான்
காடு (உ)கந்தவன் கான மன்றினில்
...காலம் காலமாய் ஆடுவான்
தேடு நற்கழல் தேர்ந்து சிந்தையில்
...தேக்கி நாண்மலர் தூவுவோம்!

No comments: