Friday, November 21, 2008

ஈசன் கோலம்!





ஆடிடும் தாண்டவம் அளித்திடும் பரவசம்
...அய்யனின் ஞான ரூபம்!
நாடிடும் கொன்றையும் நலம்தரும் மருவுடன்
...நறுமண,மல்லி,ரோஜா
சூடிடும் மாலைகள் சொன்னமாய் அணியுடை
...ஜொலித்திடும் ஈசன் கோலம்!
கோடியே கொடுப்பினும் கொண்டிடா மகிழ்ச்சியை
...கூத்தனின் பாதம் சேர்க்கும்!

No comments: