Saturday, November 1, 2008

"நீயென்றேன் நீயென்றாய் நீ"

சந்தவசந்த மட்டுறுத்துனர்(மாடரேட்டர்)
கவிமாமணி திரு.இலந்தை அவர்கள் சந்தவசந்தக் குழுமத்தில்
அளித்த பலவிதக் கவிதைப் பயிற்சிகள் உன்டு.அவற்றில் ஒன்று
வெண்பாவின் ஈற்றடி:
"நீயென்றேன் நீயென்றாய் நீ"

சேயெனக்குக் காட்டிவிட்டாய் செம்மைநெறி!சூழும் உன்
நோயினில் என் சேயாக நோக்கிடுவேன் -- பாயுமன்பில்
தாயன்றி யாருமில்லை!தாங்குகின்ற தெய்வந்தான்
நீயென்றேன் நீயென்றாய் நீ.

பிழை சரிசெய்தபின்னர் இட்ட வெண்பா.

No comments: