Tuesday, March 24, 2009

வல்லவன்சீர்ப் பாதம் மருந்து!

ஊழின் வலிமையிது;உற்றிடும் பல்பிறப்பில்
வாழும் உயர்பிறப்பு மானிடம்தான்!---தாழுமோ?
நல்லுலகில் எவ்வுயிர்க்கும் நன்றுசெய்வோம்!என்றென்றும்
வல்லவன்சீர்ப் பாதம் மருந்து.

Sunday, March 22, 2009

பாண்டி'

ஆங்கிலத்தில் PANTOUM என்னும் பாடல்வகை
திரு.இலந்தை அவர்கள்'பாண்டி'என்னும் பெயரால் கொடுத்த பயிற்சிப் பாடலை
ஒட்டி நான் எழுதியது.)

தோயும் அன்பில் துன்பம் நீங்கும்!

காயின் புளிப்பு கனியில் தீரும்
வேயின் இசையில் விழிகள் அரும்பும்
நேயம் பண்பின் நியதி சுட்டும்
கோயில் உயர்வில் கூடும் பணிவு


வேயின் இசையில் விழிகள் அரும்பும்
சேயின் மழலை சிந்தும் இனிமை
கோயில் உயர்வில் கூடும் பணிவு
ஓயும் அலையும் உண்டோ கடலில்


சேயின் மழலை சிந்தும் இனிமை
தாயின் அருமை தளிரின் தவிப்பில்
ஓயும் அலையும் உண்டோ கடலில்
தேயும் நிலவும் தெளிக்கும் ஒளியை


தாயின் அருமை தளிரின் தவிப்பில்
காயின் புளிப்பு கனியில் தீரும்
தேயும் நிலவும் தெளிக்கும் ஒளியை
தோயும் அன்பில் துன்பம் நீங்கும்

Thursday, March 19, 2009

எழில்வேலன்

எனதுயிர் தெய்வம் செவ்வேள் எழில்வேலன் என்றே
...இளமஞ்ஞை மீது வருவாய்!
மனதிருள் நீக்கும் தேசாய் வினையாவும் வேலால்
...விரைவாகப் போக்கி அருள்வாய்!
கனவெனும் வாழ்வைக் கண்டு கலங்காத சித்தம்
...கனிவான பக்தி தருவாய்!
நினதிரு பாதம் போற்றி நெறியாகக் கூட்டும்
...நிறைஞான வாழ்வை விழைந்தேன்!

Sunday, March 15, 2009

கலிவிருத்தம்

கருமணியி லொளிருமொளி கருணைபொழிவிழியே!
திருவருளி லுலகுதரும் திகழபய கரமே!
பொருவினையு பொடியெனுமுன் புகலளிசெங் கழலே!
சுருதிமறை தொழுதிடுமுன் துணையடியென் கதியே!

கலிவிருத்தம்

கலிவிருத்தம்
¸ÕÁ½¢Â¢ ¦Ä¡Ç¢Õ¦Á¡Ç¢ ¸Õ¨½¦À¡Æ¢ ŢƢ§Â!
¾¢ÕÅÕÇ¢ ÖÄ̾Õõ ¾¢¸ÆÀ ¸Ã§Á!
¦À¡ÕÅ¢¨ÉÔ ¦À¡Ê¦ÂÛÓý Ò¸ÄÇ¢¦ºí ¸Æ§Ä!
ÍÕ¾¢Á¨È ¦¾¡Ø¾¢ÎÓý Ш½ÂʦÂý ¸¾¢§Â!

Tuesday, March 10, 2009

வனம்!

கருவிளம் புளிமாங்காய் கருவிளம் புளிமாங்காய்
கருவிளம் புளிமாங்கனி

தனதனந் தனதான தனதனந் தனதான
தனதனந் தனதானனா


சதாக்கிர அறுசீர் விருத்தம்
(அடிக்கு 25 எழுத்து, 100 எழுத்து (சதாக்கிரப் பாடல்)

கழைநுழைந் திடுகாலு மினிதெனுஞ் சுவைகூட
..கலைமிகுந் திசையானதே

மழைவருங் குறிகாண மயிலினங் களதாட
..வனமதுங் கவினானதே

புழையறிந் திடயேலா நிழல்மிகுந் ததர்தோன்றும்
..புலமிதென் றறியாமலே

தழைபுனைந் தடர்காவும் அடல்மிகுந் திடுமாவும்
..தருவனந் தகவானதே!

கால் = காற்று, புழை = காட்டுவழி, புலம் = திக்கு, மா = விலங்கு, அதர் = வழி

Tuesday, March 3, 2009

அருளாயோ!

தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த...தன தான


குழைக ளாட முடிது லங்கு
..குளிர தான நிலவு கங்கை
..குலவ மேனி யிலகு கொன்றை...மலராட

உழுவை ஈரு ரியைய ணிந்து
..உரக மானு முடனி லங்க
..உமையை வாம மிடம ணிந்த... மறையோனே!

முழவி நோடு துடிமு ழங்க
..முடிவி லாத நடமி தென்று
..முதிரு மோன நிலைவி ளங்க...வருவாயே!

விழையு ஞான நிலைது லங்க
..விமல நாகி மருளு கின்ற
..வினையு மோட அபய மொன்றை...அருளாயோ!

தானத்..தனதான

நேசத்..துணையாம்வெண்
..ணீறைப்..புனைவோராய்ப்
பேசற்..கினியானைப்
..பேசித்..துதிபாடிப்
பூசித்..துணர்வாரின்
..போதப்..பொருளானை
ஓசைக்..கழலானை
..ஓதிப்..பணிவோமே!