Tuesday, November 18, 2008

புரிந்திடா நீதி!

தென்றல் காற்றதன் இங்கித இதமுடன்
..தெம்பினைத் தந்திடு தல்போல்,
அன்னை சக்தியின் கருணையும் அருளுமே
..அழிவிலா சாந்தியை சேர்க்கும்!
வன்மை புயலெனும் சூறையின் பயங்கரம்
..வையகம் கலங்குதல் போல
உன்ன நடுக்குறும் சக்தியாம் காளியின்
..உருவமும் புரிந்திடா நீதி!

No comments: