Wednesday, November 19, 2008

இசைக்கீடில்லை!





கீதம் மனம்கொள கேட்க மகிழ்வுறும்
...கீர்த்தி யுறுமுயர் பாடலில்
நாத முடன்சுர ஞானம் கமகமும்
...நாடும் சுருதியும் ராகமாய்
வேதம் நிகருறும் மேலாம் கிருதியும்
...மேன்மை பெறுமுயர் சாதனை
போத நிலையெனும் பூதி அடைந்தவர்
...போற்றித் தருமிசை கீடிலை!

No comments: