Tuesday, November 4, 2008

"சேலை அவிழ்ந்தது"

வெண்பாவின் முதற்சீர் "சேலை அவிழ்ந்தது"

சேலை அவிழ்ந்தது; சீராகக் கட்டுகின்றாள்
சோலை மலரழகுச் சுந்தரியாள்!--வேலைசெலும்
தாயறியாப் போதிலவள் தானுடுத்த ஆசைகொண்ட
சேயவளும் சின்னப்பெண் தான்.

3 comments:

Anonymous said...

இது உங்கள் பார்வைக்கு மட்டும்; வெளியிடுவதற்கு அன்று.

//...ஆசைகொண்டச் சேயவளும்.../

வலிமிகாது.

`ஆசைகொண்ட சேயவளும்' என வரவேண்டும்.

நன்கு பாடல் இயற்றுகிறீர்கள். பாராட்டுகள்.

Thangamani said...

அ.நம்பி அவர்களுக்கு,பிழையை சரிசெய்து
இடுகிறேன்.சுட்டியமைக்கு மிகவும் நன்றி!
பாராட்டுக்கும் நன்றி!.

அன்புடன்,
தங்கமணி.

Anonymous said...

பார்க்க: என் மின்மடல்