Thursday, October 30, 2008

முழுமுதலே!

நிறைசுடரோ நெறிமுறையோ
..நெகிழ்ந்துருகும் அருளமுதோ!
பிறைமதியோ பெருநிதியோ
..பெரும்புணையாம் இறைகழலோ!
தெறிகடலோ திரவியமோ
..தெய்வமதன் தெரிசனமோ!
முறையிடவோ முழுமுதலே!
..முற்றுமுனைப் பற்றிநின்றேன்!

No comments: