Thursday, October 30, 2008

பரமனின் பதமலரே!

கூடு கின்றனர் கும்பிடும் மனமொடு
...குவிந்திடும் இறையுணர்வில்
தேடு கின்றனர் திருவருள் அமுதினை
...தெளிவுறும் உள்நினைவில்
ஆடு கின்றனர் அகிலமும் புரந்திடும்
...அருமையை நினைந்தபடி
பாடு கின்றனர் பைந்தமிழ் பனுவலில்
...பரமனின் பதமலரை!

புரந்திடும்--காத்திடும்

No comments: