Monday, October 13, 2008

செய்தொழிலில் சிகரம்!

களிகொண்ட உள்ளத்துள் கற்பனைகள் சிறைப்பட்டு காவியமாய்,
...கவிஞனென உயர்ந்தான்!
உளிகொண்ட சிற்பங்கள் உன்னதமாய் உறுகல்லில் வெளிப்படவே
...உயர்சிற்பி படைத்தான்!
வெளிதன்னில் விஞ்ஞான வேள்வியென்றே விளைவுகளை உலகினுக்கு,
...விஞ்ஞானி அளித்தான்!
தெளிவுடனே அவரவரின் திறமையுடன் உழைப்பைநல்க செய்தொழிலில்
...தெரிந்திடுமே சிகரம்!

No comments: