Sunday, October 26, 2008

தீபாவளி!

தீபாவளி!

தீபச் சுடரில் ஒளிரும்
...தேவி முகமே திகழும்!
தூபம் புகைந்து மணக்க
...துய்ய மலரால் தொழுதோம்!
பாபம் யாவும் அகற்றி
...பரிவாய் எவர்க்கும் அருள்வாள்!
தீப வரிசை விளங்கும்
...தீபா வளிநாள் மகிழ்வோம்!


அன்புடன்,
தங்கமணி.

No comments: