Sunday, October 5, 2008

அன்னையின் தண்ணளி நிறம் பசுமை!

பச்சை பசுமையில் சூழ்வயல் தோற்றிடும்
...பாங்கினில் நெஞ்சமும் துள்ளும்!
இச்சை மொழிசொலும் பைங்கிளி வண்ணமும்
...எண்ணிட இன்பமே கொள்ளும்!
விச்சை மரகத வண்ணமும் அன்னையின்
...மின்னிடும் தண்ணளி அள்ளும்!
மெச்சும் செழுமையும் பச்சையின் வண்ணமாய்
...மேன்மையைத் தந்திடக் கொள்வோம்!

No comments: