பாட்டியின் சிரிப்பு!(படக் கவிதை)
தொடரும் துயரமதைத் துணிவாய்த் தொலைத்துவிட
...துணையாய் உழைப்பினையே சுவாசமாய்
படரும் விடியலிலே பசுமை வயலினிலே
...பதமாய் மேழிதனைச் செலுத்துவாள்!
இடரும் விலகிவிடும் இளைஞன் பேரனவன்
...இசைவாய் உழவியலைப் பெருக்குவான்!
படமாய் அவள்சிரிப்பு பார்க்க மனம்நிறையும்
...பனியாய் வெள்ளைநகை பரவசம்!
வயசு கோளாறு
1 year ago

No comments:
Post a Comment