Sunday, October 12, 2008

பேறு!

பேறு!

கவிதையில் திளைப்பது பேறு!
..கவினுறு நவரசம் பேறு!
செவிநுகர் செல்வமோர் பேறு!
..சிறப்புறு கல்வியும் பேறு!
குவிந்திடு மனமுமோர் பேறு!
..கொண்டிடும் பக்தியும் பேறு!
தவிப்பினில், தளர்வினில் தாயாய்---தாங்கும்
..தனிப்பெரும் இறையருள் பேறே!

No comments: