Wednesday, October 1, 2008

இயற்கை எனும் எழில்வரம்!

சிறைவிரிக்கும் பறவை செறிந்திலங்கும் தருக்கள்
...திரையலைக்கும் நதிகள் சிறப்பாகும்!
உறைபனியின் குளிரும் ஒளிபொழியும் நிலவும்
...ஒழுகருவி நடையும் சிலிர்ப்பாகும்!
முறையியைந்த நெறியில் உலகமுடன் யுகமும்
...முரணின்றி சுழல்தல் வியப்பாகும்!
இறையழகை இயற்கை எழில்வரமாய் விளக்கும்
...இனிமையினில் உணர்வும் உயர்வாகும்!

No comments: