Thursday, October 16, 2008

உனையே பாடும் வரம்தருவாய்!

கண்ணால் காணும் பொருளாய்
...காட்சி அருளும் ஒளிப் பிழம்பே!
தண்ணார் புனலாய் வளியாய்
...தரணி காக்கும் பரஞ்சுடரே!
விண்ணோர் பரவும் விடையூர்
...விமலன் அருணா சலசிவமே!
பண்ணார் இசையில் உனையே
...பணிந்து பாடும் வரமருள்வாய்!

No comments: