Thursday, October 30, 2008

மலர்தாள் தருவான்!

கனைகுரல் நிரையிடை தெரிகிறது
..கருணை அமுதாய் கறவை பொழியும்!
நினைவீனில் நிகழ்வினில் நிறைகிறது
..நெகிழும் பரிவில் உறவும் இனிக்கும்!
தினைதுணை பிறர்நலம் நினைத்துவிடின்
..திகழும் அமைதி உளத்தில் நிலைக்கும்!
வினைதனை விலக்கிடும் இறையவனும்
..விரும்பும் புணையாய் மலர்தாள் தருவான்!

No comments: