Wednesday, October 22, 2008

இனிக்கும் மழலை!

சின்ன அடி சிவக்க ஆடும்
...சேயின் சிரிப்பு மனமயக்கும்!
மின்னுகின்ற நயனம் கூறும்
...மீனும் மானும் நிகரிலையே!
கன்னலெனும் சுவையில் ஊறும்
...காதில் இனிக்கும் கனிமழலை!
பின்னமாகும் என்றன் ஆவி
...பிஞ்சு மனதைக் கொஞ்சிடவே!

No comments: