Monday, October 20, 2008

ஏன்?

ஏன்?

சின்ன வயதினில் சிரித்திடும் வாழ்வினில்
...சேர்ந்தே கூடி மகிழ்ந்ததுமேன்?
பின்னர் வறுமையின் பிடிதனில் மூழ்கியே
...பீழையாகிப் போனதுமேன்?
இன்னல் வளர்ந்திடும் ஏழ்மையில் உறவுகள்
...எங்கோ காணோம் என்றதுமேன்?
என்ன நினைவுகள்! எத்தனை நிகழ்வுகள்!
...இன்று காலம் மருந்தாகும்!

No comments: