Saturday, September 27, 2008

விகிர்தா!அருள்வாய்!

விழுதாய் மனதுனை விழைந்தே படர்ந்திட
...வேண்டி உனையே நாடேனோ?
அழுதே பலமுறை அகந்தை அழிந்திட
...அருள்வாய் எனவே பாடேனோ?
தொழுதே பதமலர் துணையாய்க் கருத்தினில்
...சுடராய் ஒளிரத் தேடேனோ?
மழுமான் கரம்திகழ் மதிவான் நதிசடை
...விகிர்தா அருள வாராயோ?

No comments: