Friday, May 14, 2010

தஞ்சைப் பெருங்கோயில் !

("மா மாங்காய் மா மாங்காய்" - என்ற வாய்பாடு)

(சிவசிவாவின் பின்னிரண்டடிக்கு, நான் முன்னிரண்டு அடி எழுதுகிறேன். சிவசிவாவுக்கு என் நன்றி.)


ஓதை மிகுபாரில் உய்யும் வழிதேடும்
வாதை யினிவேண்டா மன்றில் நடமாடும்
தாதை உறைகின்ற தஞ்சைப் பெருங்கோவில்
பாதை அறிநெஞ்சே! பற்றா வினைதானே.....1

ஓதை=ஆரவாரம்
வாதை=துன்பம்.


மதிக்கும் திருமேவும் மன்னர் தமதன்பால்
செதுக்கி உயிரூட்டும் சிற்பக் கலையோங்கப்
பதிக்குப் பணிசெய்த தஞ்சைப் பெருங்கோவில்
துதிக்கும் அடியாரைத் தொடரா துயர்தானே.....2

No comments: