Wednesday, May 26, 2010

தஞ்சைப் பெருங்கோவில் --5


அழலார் நுதல்கண்ணால் அனங்கன் தனைச்செற்றான்
கழலை முடிதன்னைக் காணா இருவர்க்கும்
தழலாய் நிமிர்ந்தானின் தஞ்சைப் பெருங்கோவில்
தொழலே வினைதீர்ந்து சுகிக்கும் வழியாமே.

தவமே உருவாகத் தருஆல் நிழல்கீழே
சிவமாய் அமர்மோனத் திருவாய் அருளீசன்
தவள விடையேறி தஞ்சைப் பெருங்கோவில்
எவர்போற் றினும்வேண்டும் எல்லாம் பெறுவாரே.

No comments: