Wednesday, May 19, 2010

தஞ்சைப் பெருங்கோவில் -- 3


நிழலும் தரைவீழா நீள நெடுங்கோவில்
விழையும் அடியார்க்கு வேண அருள்செய்யும்
தழலன் உறைகின்ற தஞ்சைப் பெருங்கோவில்
நிழலை அடைநெஞ்சே! நெருங்கா வினைதானே....5

நிழல்=சாயை

//நிழல் எனில் பல பொருள்கள்.
நிழல் - தானம்; புகலிடம்;
பல பாடல்களில் நீழல் எனவும் வரும்.
திருவடித் தலம், திருவடி நிழல்,,,,//(மிக்க நன்றி!சிவா!)


வரித்தான் கரித்தோலை; மங்கை யொருபாகன்
சரித்தான் மனக்கோவில் தத்தும் நதிகுஞ்சி
தரித்தான் உறைகின்ற தஞ்சைப் பெருங்கோவில்
கரத்தால் தொழுவாரைக் காலன் அணுகானே.....6

சரித்தல்=வசித்தல்
வரித்தல்=உடுத்துதல்
குஞ்சி=தலை,உச்சி மயிர்.

No comments: