வெம்பும் உளமோடு வீணில் அலையாதே
இம்பர் அடியாரின் ஈசன் உமைநேசன்
சம்பு உறைகின்ற தஞ்சைப் பெருங்கோவில்
நம்பி அடைநெஞ்சே நாளும் வருமின்பே.
மையல் எனுமோக மாய வலைவீழ்ந்து
பைய அழியற்க! பாதி மதிசூடி
தையல் ஒருகூறன் தஞ்சைப் பெருங்கோவில்
ஐயன் அடிபோற்றி அல்லல் அறுநெஞ்சே.
வயசு கோளாறு
1 year ago

No comments:
Post a Comment