Sunday, May 23, 2010

தஞ்சைப் பெருங்கோவில் --4


புங்கன்; அடியார்கள் போற்றும் அருளாளன்;
கங்கை நதியோடு கனக நிறக்கொன்றைத்
தங்கும் சடையானின் தஞ்சைப் பெருங்கோவில்
உங்கை குவித்தேத்தின் உறுநோய் அடையாவே.

புங்கன்=தூயவன்.

மலையன்; அருள்செய்யும் மன்னன்; சிரமீது
அலையும் நதிசூடி ஆடல் புரிகின்றத்
தலைவன் உறைகின்ற தஞ்சைப் பெருங்கோயில்
தலையால் தொழுவார்கள் தவியார் தரைமீதே.

No comments: