Wednesday, May 12, 2010

மயிலையை அடைபவர் மகிழ்வர்--- 10

முதுவழி யதுமுயர் தவநெறி முறையினில் இறைவனை அடைவது
பொதுவழி நெகிழுறு அடியவர் புகலென இறைதொழு நவவழி
இதுவழி சிவமதன் திருவினை இகமதில் எளிதினில் அடைகிற
மதுவழி மலரணி அரன்நகர் மயிலையை அடைபவர் மகிழ்வரே.

நவ வழி:
ஒன்பது வித பக்தி:
1.ஸ்ரவணம் 2.கீர்த்தனம் 3.ஸ்மரணம் 4.பாதசேவனம்
5.அர்ச்சனம் 6.வந்தனம் 7.தாஸ்யம் 8.ஸக்யம் 9.ஆத்ம நிவேதனம்.

No comments: