Thursday, August 26, 2010

ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே!-- 4

விரியும் சடையில் கொன்றை தும்பை
...விண்நீர் கங்கை மதியும் சூடி
கரியின் தோலை உடையாய் ஏற்கும்
...கடவுள் தானாய் அடிமை கொண்ட
பரிவின் திறத்தை நாவ லூரர்
...பதிகத் தாலே போற்றி செய்தே
உரிய அன்பில் கண்டு கொண்ட
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.

No comments: