Sunday, August 22, 2010

திருஓண காந்தன் தளிசேர் நெஞ்சே!--1

எண்சீர் விருத்தம் - '8 மா' வாய்பாடு.
1௫ சீர்களில் மோனை.


தலமும் புகழும் இசைக்கும் அன்பர்
...சகல உயிரின் உய்வை எண்ணி
மலரும் புகைகொள் தூபம் கொண்டு
...மனதும் நெகிழப் போற்றி னாரே!
விலகும் வினையும் தூசைப் போல
...விடையோன் அருள்வான்!ஓமென் றோதும்
ஒலியில் நிறைவாய் நிற்கும் வேதன்
...ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே!

No comments: