Tuesday, August 24, 2010

ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! --3

மண்டை யோட்டில் பலியைத் தேரும்
...மங்கை பங்கன் வேடம் ஏற்றிக்
கொண்ட அன்பில் கூடும் உணர்வில்
...கும்பிட் டிறைவன் தாளை எண்ணும்
தொண்ட ரென்றும் தமிழ்த்தேன் பூவாய்த்
...தொடுத்த பாக்கள் வரமாய்த் தோன்றி
உண்ட ருளென்னும் எம்மான் ஈசன்
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே!

No comments: