(எண்சீர்ச் சந்த விருத்தம் - "விளம் மா விளம் மா விளம் மா விளம் மா " என்ற வாய்பாட்டை ஒட்டி அமைந்தது. அரையடிக்குள் சீர் எதுகை அமைந்த பாடல்கள்)
"கருவிளம் தேமா கருவிளம் தேமா
...கருவிளம் தேமா கருவிளம் புளிமா"
நிதியவன் நெஞ்சில் வதிபவன் என்றும்
...நெகிழ்வுறு அன்பில் திகழ்ந்திடு மனமே!
சுதிநிறை பண்ணில் துதியிசை தன்னில்
...சுகமுறு அன்பர் அகமதில் வருவான்!
கதியவன் என்று பதிகமும் சொல்லிக்
...கழலிணைப் பற்றின் பழவினை தீரும்!
புதியவன், கங்கை நதி,மதி சூடி
...புகழினை ஓது! இகமதில் நிறைவே!
வயசு கோளாறு
2 years ago

2 comments:
subbu thatha sings your song ( what a remarkable prayer !!!) in his blog
http://menakasury.blogspot.com
திரு.சூரி அவர்களுக்கு,
சிறப்பாகப் பாடியிருக்கிறீர்கள்.
உங்கள் ஸ்ரத்தையும்,பக்தியும் தெரிகிறது!
மிக்கநன்றி!
அன்புடன்,
தங்கமணி.
Post a Comment