Thursday, August 5, 2010

சிவனைத்துதி மனமே!-- 2

பதவியும் பேரும் சதமென லாமோ?
...பரமனின் அன்பே நிரந்தர மாகும்!
நுதலுடைக் கண்ணன் விதமவன் நாமம்
...நுவலுவர் என்றும் நவையினை வெல்வார்!
இதமதைச் சேர்க்கும் பதமதை எண்ணின்
...இயமனைச் சாடும்;பயமதைப் போக்கும்!
இதயமும் கோவில் உதயமாய்த் தோன்றும்
...இணையடி ஆகும் புணைநவில் நெஞ்சே!

No comments: