உணர்வினில் பக்தி மணமது வீசும்
...உயர்வுறு பாடல் மயர்வறச் செய்யும்
தணலுருக் கொண்டான் கணங்களின் ஈசன்!
...தவவுரு மேவும் சிவகுரு போற்றி
இணைகழல் பற்றித் துணையவன் என்றால்
...இகமதில் நாளும் புகல்தரும் வள்ளல்
இணர்மலர் மாலை கொணர்ந்தவன் மார்பில்
...இலங்கிடச் சூட்டி நலம்பெறு நெஞ்சே.
மயர்வு=அஞ்ஞானம்.
இணர்=பூ,பூங்கொத்து
வயசு கோளாறு
2 years ago

1 comment:
மகளிர் திரட்டிக்கு நன்றி!
வளர்க உமது பணி!
Post a Comment