Friday, August 6, 2010

சிவனைத்துதி மனமே! --3

சிரமதில் கங்கை கரமதில் ஓடு
...திகழ்ந்திடு சாம்பல் உகந்திடு மேனி
சரமெனக் கொன்றை உரகமும் சூடி
...சவமெரி காட்டில் நவமுற ஆடும்
பரமனின் தாளை சரதமென் றெண்ணு!
...பவமதில் சூழும் அவமதைப் போக்கும்!
அரனவன் நாமம் வரமென வேற்றும்
...அடியவர் அன்பன் வடிவுறு நெஞ்சே.

No comments: