படையாய் வருத்தும் ஊழை வெல்லும்
...பாதை யொன்றைச் சொல்வேன்! அன்பைக்
கொடையாய் அருளும் ஐயன் பாதம்
...குறித்தே மலர்பூ மாலைச் சாற்றி
விடையா! விமலா! என்றே போற்றின்
...வினையைத் தீர்க்கும் மங்கை வாமம்
உடையான் நாவ லூரர் அன்பன்
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.
வயசு கோளாறு
2 years ago

No comments:
Post a Comment