Sunday, August 15, 2010

சிவனைதுதி மனமே!--10

வெய்யவல் வினையில் நைவதென் நிதமும்
...வென்றிடும் வழியை நன்கறிந் திடுவாய்;
துய்மலர் அலங்கல் கைதொழு (து)இடவே
...துன்பமும் விலகும் இன்பமும் மலரும்
பெய்கழல் பணிந்தால் எய்ப்பது மறையும்
...பிஞ்ஞக னவனின் அஞ்செழுத் தைநினை
மெய்தனில் இடங்கொள் மைவிழி உமையின்
...வெண்மதி சடையன் நண்ணிடு மனமே.

எய்ப்பு=தளர்வு

1 comment:

Geetha Sambasivam said...

அற்புதமான பாடல் அம்மா. நன்றி.