Wednesday, September 17, 2008

இயற்கையே வியப்புதான்!

நீலவெளி வெள்ளியலைக் கோலமோ?
...நெளிந்துயர்ந்துத் தெறித்துவிழும் ஜாலமோ?
ஓலமிடும் ஆழியொலி வேதமோ?
...உறுமுகின்ற இடியொலியே நாதமோ?
பாலமொன்று விண்புவியை சேர்க்குதோ?
...பாதையொன்றை வானவில்லும் ஆக்குதோ?
காலமெனும் சக்கரந்தான் வெல்லுமே!
...கணக்காக விதிவழியே செல்லுமே!

No comments: