Friday, September 12, 2008

குமரனருள் போற்றுவோம்!



கண்குளிர சிவகுருவைப் பாடியே!
...கண்டுநிதம் தொழுதிடுவோம் நாடியே!
விண்மகிழ சூர்வதைத்த சக்திவேல்!
...வினையகற்றி வெற்றிதரும் முத்துவேல்!
பண்ணழகு அருணகிரி சந்தமே!
...பழகுதமிழ் தந்திடுமா நந்தமே!
எண்டிசையும் குமரனருள் போற்றுவோம்!
...இசைமலரில் சரம்தொடுத்துச் சாற்றுவோம்!

No comments: