Thursday, September 11, 2008

நல்லதை நினை மனமே!

நினைப்பதில் நலத்தை நாடிடு!
...நிறைவுறு உளமும் கூடிடும்!
முனைப்புடன் உழைப்பை ஏற்றிடு!
...முறையுடன் உயர்வும் சேர்ந்திடும்!
சினத்தையுன் பொறையால் வென்றிடு!
...தெளிந்திடும் அமைதி வாய்த்திடும்!
மனத்தினில் இறையைச் சார்ந்திரு!
...வளம்தரும் அறிவும் ஓங்கிடும்!

No comments: