Thursday, September 11, 2008

நதியே..

நதியே..
நதியே..
வளைந்துநெளிந்து
யவ்வனம் காட்டுவதால்..
பெண் என்றா ரோ சிலர்?????????
பாவ மூட்டைகள்
பலரது சுமந்ததால்..
தாய் என்றாரோ சிலர்????????

நான் சொல்வேன்...
நீ பெண்ணே அல்ல என்று..

செங்காலை கதிரவனும்
குளுமை தரும் வெண்ணிலவும்
என்னதான் பேசும் உன்னிடம்.????????
சொல்லி இருப்பாயா... யாரிடமாவது?????????

துள்ளி ஓடும் மீன்கள்
துக்கம்என்ன என்றே
உனக்கு மட்டுந்தானே தெரியும் ????
சொல்லித்தான் இருப்பாயா.. யாரிடமாவது???????

சத்தமின்றி , சலனமின்றி
ஆர்பாட்ட ஆரவாரமின்றி ...
ஆடி அசைந்து வரும் நீ..
.நிச்சயமாய் பெண்ணா என்ன???????/

பிடித்து வைத்த பிள்ளையார் எல்லாம்
கரைத்து போட்டனர் உன்மேலே..
மறைத்தே உன்துக்கத்தை ...
மறுகும் நீ பெண்ணா என்ன??????????
நதியே..நான் சொல்வது சரியா???????????????

No comments: