
நெஞ்சமதில் தோன்றுதொரு காட்சி வண்ண
..நீலமயில் வேலவனின் மாட்சி!
கொஞ்சிவரும் தென்றலுமே வீசும்! கந்தன்
..கொலுவிருக்கும் பேரழகைப் பேசும்!
விஞ்சுமெழில் வள்ளிமகிழ் நாதன்! பக்தர்
..வினையகற்றி வெற்றிதரும் வேதன்!
தஞ்சமென்று தாளிணையைச் சூடும் அன்பர்
..தங்குமுள்ளம் பொங்குமின்பம் கூடும்!
No comments:
Post a Comment