Saturday, September 27, 2008

வேலவனின் அழகு!




நெஞ்சமதில் தோன்றுதொரு காட்சி வண்ண
..நீலமயில் வேலவனின் மாட்சி!
கொஞ்சிவரும் தென்றலுமே வீசும்! கந்தன்
..கொலுவிருக்கும் பேரழகைப் பேசும்!
விஞ்சுமெழில் வள்ளிமகிழ் நாதன்! பக்தர்
..வினையகற்றி வெற்றிதரும் வேதன்!
தஞ்சமென்று தாளிணையைச் சூடும் அன்பர்
..தங்குமுள்ளம் பொங்குமின்பம் கூடும்!

No comments: