Friday, September 12, 2008

அருமருந்து!

அருமருந்து!
--------------
பதம்தூக்கி ஆடுகின்ற பாங்குகண்டேன்!--எண்ணம்
...பனிமேவும் நிலவாடும் விரிசடைக்கே!
விதமாகும் உன்னடியார் விசனமற--நீயேன்
...வேடமிட்டு துன்பமுற்று சிறுமையுற்றாய்!
நிதமேஉன் தொண்டினுக்கே நினைவுடையார்--பாக்கள்
...நிறையுமன பக்தியுடன் கனிந்துதந்தார்!
சதமாகும் உன்னிருதாள் தொழுவதொன்றே--பிறவித்
...தளைநீக்கும் வினைதீர்க்கும் அருமருந்தாம்!

No comments: