Friday, August 29, 2008

கனவே.. கலையாதே...

கண்மூடிய கனவில்
கைக்கு கிட்டியவை..
எட்டாமல் ஓடியதேன்..
நிற்காமல் ... நிஜத்தில்..

கனவே.. நீ .. கலையாதே..
இமை எனும் கதவிலே.
.இழுத்து பூட்ட நினைக்கிறேன்..
கண்விழிக்க ஆசையில்லை ..
காணாமல் போய்விடுவாயே .. நீ .. என்று

1 comment:

Thangamani said...

இமையை இறுக மூடினால் கனவு கண்ணுள் நிற்குமோ?


பிள்ளைக் கனவோ உள்ளம் கொள்ளை
கொள்ளும் கனவோ கூறாய்! பெண்ணே!