Saturday, August 23, 2008

கண்ணன் வந்தான்!

கண்ணன் வந்தான்!
-----------------
கண்ணன் தண்டையின் ஓசையில்
...கன்னங் குழிந்திடும் முறுவலில்,
எண்ணங் கவர்ந்திடும் சேட்டையில்,
...இன்பக் களியுறும் வையகம்!
கிண்ணம் நிறைந்திட வெண்ணையைக்
...கெஞ்சிக் கொஞ்சியே உண்ணுவான்!
பண்ணில் குழலிசை நாதமும்
...பாகாய் உருகிடப் பண்ணுவான்!
அன்புடன்,தங்கமணி.

No comments: