Tuesday, August 19, 2008

பானை பிடித்தவள் பாக்கியம்

அள்ளஎன்றும் குறையாத அன்புநிறைப் பொக்கிடமாய்
...அவனிதனில் வந்துதித்த தேவதையோ?
வெள்ளமெனத் துள்ளிவந்து வேகமுடன் வழிநடக்கும்
...விளைச்சலெனப் பயிர்தழைக்கும் பெண்ணதியோ?
கொள்ளையின்பக் கருணையிலே கொலுவிருக்கும் சக்தியைப்போல்
...குடும்பமதைக் காக்கின்ற குலமகளோ?
பிள்ளைகளும், கணவனுடன் பெரியவரும் போற்றுகின்ற
...பெண்ணிவளே பாக்கியத்தைப் பெற்றவளாம்!

No comments: