Monday, August 4, 2008

சிவன் , முருகன் துதி...!


சிவன் துதி
-----------
செஞ்சடையில் பிஞ்சுமதி சேர்ந்திலங்கும் கங்கைநதி!
அஞ்செழுத்தைச் சிந்தித்தல் ஆனந்தம்!--கொஞ்சுமெழில்
மஞ்சுதவழ் மன்னிமய மங்கையொரு பாகத்தன்
கஞ்சமலர்த் தாளிணையே காப்பு.
---------------

முருகன் துதி
--------------
செந்தமிழின் சந்தங்கள் சிந்துக்கள் விந்தைகள்!
கந்தனின் காவடிபோல் கண்ணிமைக்கும்--சந்நிதியில்
சிந்தைமகிழ் சுந்தரனை செந்தில்வேல் சண்முகனை
வந்திப்போம் நெஞ்சமதில் வைத்து.

No comments: