Friday, August 22, 2008

பிள்ளையார் சுழி

வினாயகனே..

வினாயகன்.. வினை தீர்ப்பவன்..

விளையாட்டாய் ,சித்தி வினாயகனாய்
வலஞ்சுழியாய் வடிவு கொண்டு..
வருந்துயர் அகற்றுபவன்..

அழகன் ஆறு முகனை
ஆண்டியாக்கிய ஆனைமுகன்..
அம்மை அப்பனன்றி..
அவணி வேறில்லை என்றமகன்..

தடுக்கி விழும் இடமெல்லாம்..
தனியாக இருப்பான் அவன்..
தடுத்திடுவான்.. தடைகளை..
தவிக்க விடாமல்.. தன் பக்தர்களை!!!!!!!!!

உன்பாதம்.. தேடிவந்தேன்..
உள்ளத்து தூய்மையுடன்
ஊழ்வினைகள் தீர்ப்பாயே..
உமைமைந்தன் நீயுந்தான்..

அன்புடன்

அகிலா

No comments: