Saturday, August 30, 2008

பொழிவினில்!

கண்களின் பொழிவினில் கரைந்திடும் துயரமும்
...கனியும் பக்தியும் தோன்றும்!
விண்ணதன் பொழிவினில் விளைந்திடும் பயிரெலாம்
...வேண்டும் வளங்களைச் சேர்க்கும்!
புண்ணியப் பொழிவாம் பொருள்பெறு சொற்களில்
...பொலியும் மாந்தரின் மாண்பு!
பண்ணியம் பொழிந்திடும் பரமனின் அருள்திறம்
...பாக்கள் மலர்களாய்ப் பூத்து!

அன்புடன்,
தங்கமணி.

No comments: